தில்லியில் 4 மாடிக் கட்டடம் திடீரென சாய்ந்தது: உடனடியாக இடிக்க அதிகாரிகள் உத்தரவு!
தில்லியில் 4 மாடிக் கட்டடம் ஒன்று திடீரென ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில், அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
தில்லி காந்தி நகர் பகுதியில் உள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்று திடீரென ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில், அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், அந்தக் கட்டடத்தை அதன் உரிமையாளரே முன்வந்து இடித்து அகற்ற தில்லி மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இடிக்கும் பணியை உடனடியாக இன்றே மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளது. அவர் இடிக்கத் தவறினால், உரிய விதிகளின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காந்தி நகரின் ஷாத்ரா பகுதியில் உள்ள இக்கட்டடம் திடீரென சாய்ந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அதிலிருந்த மக்களை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதில் காவல்துறையினர் மக்கள் கட்டடத்தின் அருகே செல்லாதவாறு சுற்றி வளைத்துத் தடுத்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கட்டடத்தின் நிலைமையை ஆய்வு செய்தனர்.
அந்தப் பகுதியைச் சுற்றி வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம், தில்லியின் சாந்தி நிகேதன் பகுதியில் மாணவர் விடுதி செயல்பட்டு வந்த 5 மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 7 பேர் பலியாகி பலரும் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Four-storey building in Delhi suddenly tilts; officials order immediate demolition
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
