Arts, culture, entertainment and media
முதியவரின் சொத்தை மோசடி செய்த தாய் ,மகன் உள்ளிட்ட கும்பல் மீது வழக்கு
: புதுச்சேரி: முதியவரின் சொத்தை பத்திரபதிவு மூலம் மாற்றி மோசடி செய்த மகன் மற்றும் தாய் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை முருகேசன் நகரை சேர்ந்தவர் குமாரசாமி, 65; இவரின் மகள் திருமண செலவிற்காக, லாஸ்பேட்டை நிவாஸ் அபார்ட்மென்ட் பகுதியை சேர்ந்த தற்போது பிரான்சில் இருக்கும் கணேஷ் என்பவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.
குமாரசாமி கடன் வாங்கியதற்காக, காமராஜர் நகரில் உள்ள தனது சொத்தை, பொது அதிகாரப்பத்திரம் மூலம் கணேஷ் பெயருக்கு, கடந்த 2022ம் ஆண்டு உழவர்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பவர் கொடுத்தார்.
இந்நிலையில், குமாரசாமி வேறொரு இடத்தில் இருந்த சொத்தை விற்று, கடந்த 2024ம் ஆண்டு, அவரது வங்கி கணக்கு மூலம் மொத்தம் 24.50 லட்சம் ரூபாயை, கணேஷின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். மீதும் உள்ள பணத்தை பவர் பத்திரத்தை ரத்து செய்யும் போது, தருவதாக அவரிடம் கூறினார்.
இந்தியாவிற்கு வந்து பவர் பத்திரத்தை ரத்து செய்து கொடுப்பாக கணேஷ் காலம் கடத்தி வந்தார்.
இந்நிலையில், பவர் கொடுத்த சொத்தின் வில்லங்கம் எடுத்து பார்த்த போது, குமாரசாமிக்கு தெரியாமல் போலி ஆவணம் தயார் செய்து, கணேஷ் தனது தாய் பார்வதி பெயருக்கு சொத்தை மாற்றி பத்திர பதிவு செய்தது தெரியவந்தது.
மோசடி செய்த கணேஷ், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் பார்வதி, பிடல் காஸ்ட்ரோ மற்றும் சிலர் மீது அவர் புகார் செய்தார். அதன்பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.