திருமணிமுத்தாற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றப்படுமா?

மல்லசமுத்திரம்:திருமணிமுத்தாற்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, ஆட்டையாம்பட்டி,
மாமுண்டி, ஆத்துமேடு, மாரம்பாளையம், கொன்னையாறு,
மாணிக்கம்பாளையம் வழியாக, பரமத்திவேலுார் அருகே, காவிரியாற்றில்
கலக்கிறது. இந்த ஆற்றங்கரையை ஒட்டி பல்லாயிரக்கணக்கான விவசாய
நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.தற்போது, இந்த ஆற்றில்
அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், சூரிய ஒளி
மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. எனவே, ஆகாயத்தாமரை
செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.