Politics
முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி செப்.15ல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம்: த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி முழுமையாகபயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி செப்.15 முதல்விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் பாக்கியநாதன் கூறிய தாவது:
பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள்இருமுறை விவசாய சங்க நிர்வாகிகளைஅழைத்து பேசினர். பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ச்சியாக விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர்.முதல்வர் விஜய் உடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பைரத்து செய்து, அனைவருக்கும் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
2025 மே 1முதல் 2026 பிப்.28 வரையிலான 10 மாதங்களில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்பதை ரத்து செய்து நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தவணை தவறிய அனைத்து விவசாயிகளுக்கும் விதிக்கப்பட்ட வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திசெப்.15 முதல் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே 40 விவசாய சங்கங்களை ஒருங்கிணைந்து கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
