ஏரியில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கும் கழிவுநீர் பாசனத்திற்கு நீர் திறக்காததால் விவசாயிகள் கவலை
கெலமங்கலம்; கெலமங்கலம் பட்டாளம்மன் ஏரியில், சுத்தி-கரிப்பு செய்யாத கழிவு நீர் கலந்து, தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. பாசனத்திற்கு கடந்த, 9 ஆண்டுகளாக நீர் திறக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
.கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 30 ஏக்கர் பரப்பளவில் பட்-டாளம்மன் ஏரி உள்ளது. காருகொண்டப்பள்ளி, பைரமங்கலம், டி.கொத்தப்பள்ளி, காடு உத்தனப்-பள்ளி, அஞ்செட்டி துர்க்கம், குந்துமாரனப்பள்ளி பகுதிகளில் மழை பெய்யும் போது, பட்டாளம்மன் ஏரிக்கு தண்ணீர் வரும். கடந்த, 2017ம் ஆண்டு வரை, ஏரியில் இருந்து பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறக்கப்பட்டது.கால்வாய் ஆக்கிரமிப்பு
அதன் பின், மதகு மேற்கு பாசன கால்வாய் ஆக்-கிரமிப்பு செய்யப்பட்டதால் கடந்த, 9 ஆண்டுகளாக பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை. மாறாக ஏரியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மீன் பிடிக்க குத்தகைக்கு விடப்படுகிறது. பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாய பாசனத்-திற்கு நீர் வழங்க வேண்டும் என, முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தேன்கனிக்-கோட்டை தாசில்தார், ஓசூர் சப்-கலெக்டர் அலு-வலகத்தில், விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட-வில்லை. இந்த ஏரி மூலம் இருபோக நெல் சாகு-படி செய்யப்பட்டு வந்த, 80 ஏக்கர் நிலங்கள் தற்-போது வானம் பார்த்த பூமியாக மாறியுள்ளன. மேலும், கெலமங்கலம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் கழிவு நீர், சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக ஏரியில் கலக்கிறது. அதனால், ஏரி நீர் பச்சை நிறமாக மாறி கடும் துர்நாற்றம் வீசுகிறது.
கெலமங்கலம் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்-டத்திற்கு ஆதாரமாக உள்ள பட்டாளம்மன் ஏரி, தற்போது கழிவு நீர் குட்டையாக மாறி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு கால்வாயில் நீர் திறக்கப்பட்டு, 9 ஆண்டு கள் ஆகி விட்டது. கெலமங்கலம் டவுன் பஞ்., நிர்-வாகம், வருவாய்துறை இணைந்து, ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன், ஆக்கிரமிப்பு-களை அகற்றி, பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.