Politics
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் ரூ.50,000க்கு மேல் எடுத்து செல்ல தடை
செங்கல்பட்டு, செப். 16– மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல

மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல தடை விதித்து, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் வெ ளியிட்ட அறிக்கை:
மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்., 6ம் தேதி நடக்கிறது. இதனால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன்படி மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செ ல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய ஆவணங்களுடன் கூடுதல் பணம் எடுத்து செல்ல வேண்டும்.
வாக்காளர்களை கவரும் வகையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள், மதுபானங்கள், பரிசு பொருட்கள் சட்டவிரோத செ யல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுராந்தகம் எல்லை பகுதிகளில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு என தலா ஒன்பது குழுவும், இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், வருமான வரித்துறையிடம் ஒப்டைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஏழு நாட்களுக்குள் வேட்பாளர், அரசியல் கட்சி, தொடர்புடையது இல்லையென ஆராய்ந்து விடுவித்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
