Politics
முத்துக்கொண்டாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
திருவாலங்காடு, செப். 17– முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தை திருவள்ளூர் தொகுதி
முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில், நெல் கொள்முதல் நிலையத்தை திருவள்ளூர் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., அருண்குமார் திறந்து வைத்தார்.
திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, நடப்பாண்டிற்கான சொர்ணவாரி பருவத்திற்கு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று தொடங்கப்பட்டது.
திருவள்ளூர் தொகுதி தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ., அருண்குமார், கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். உடன், திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜேஷ், த.வெ.க., மாவட்ட துணை செயலர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவாலங்காடு ஒன்றியத்தில், களாம்பாக்கம், சின்னமண்டலி உள்ளிட்ட கிராமங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படாததால், அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜேஷ் கூறுகையில், “திருவாலங்காடு ஒன்றியத்தில் மற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. அடங்கல் பெற்று பதிவேற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது,” என்றார்.