Arts, culture, entertainment and media
‘தண்ணீர் வழங்க மறுப்பதா? -----------------–––––––––––––––––––––––––––– எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பல்லடம்: ‘தொட்டி கட்டிக் கொடுத்த எங்களுக்கே தண்ணீர் வழங்க மறுப்பது ஏன்?’ என்று கூறி, பொதுமக்கள் பல்லடம் எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மெஜஸ்டிக் சர்க்கிள் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீப காலமாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறி, பொதுமக்கள் நேற்று எம்.எல்.ஏ., மற்றும் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களிடம் பேச்சு நடத்திய எம்.எல்.ஏ., ராம்குமார், இது குறித்து பி.டி.ஓ.,விடம் பேசி, உரிய தீர்வு காண்பதாக கூறினார். தொடர்ந்து, பொதுமக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். ஆய்வு மேற்கொள்ள பி.டி.ஓ., இது குறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியை மெஜஸ்டிக் சர்க்கிள் பகுதியில் நாங்கள் கட்டிக் கொடுத்தோம். தினசரி 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், 35 ஆயிரம் லிட்டர் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதிலும் குறைத்து, 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் வினியோகிக்கின்றனர்.
இங்கிருந்து வேறு இடத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் அதை வேண்டாம் என்று கூறவில்லை. எங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்குங்கள் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தில் கேட்டால், தொட்டி கட்டிக் கொடுத்து ஊராட்சியில் ஒப்படைத்து விட்டால், அதன் பிறகு அது குறித்து நீங்கள் கேட்கக்கூடாது என்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட குடிநீரை வழங்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இவ்வாற அவர்கள் கூறினர்.
