Politics
இம்மானுவேல் சேகரன் நினைவிடம் திருமாவளவன் வரக்கூடாது: கிருஷ்ணசாமி கருத்திற்கு எதிர்ப்பு
காரைக்குடி: இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு திருமா வளவன் வரக்கூடாது என்று கிருஷ்ணசாமி கூறுவது கீழ்த்தரமானது. இதைக் கூறுவதற்கு அவர் யார் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்துவது நாடகம். த.வெ.க.,வில் இணைந்துள்ள,மு-ன்னாள் அமைச்சர்கள் எல்லாம் நல்லவர்களா. ஊழல் வாதிகள் இல்லையா. இவர்களை சேர்த்துக்கொண்டு ஊழல்களை ஒழிப்போம் என்று கூறு கிறார்கள்.
ஆதவ் அர்ஜுனா விளையாட்டு பிள்ளை. சட்டசபையில் பேசி தனது தரத்தை குறைத்துக் கொள்கிறார். அவர் வாயை குறைக்க வேண்டும்.
த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இடைத்தேர்தல் வந்தால் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிப்போம். ஆனால் இடைத்தேர்தல் நடக்குமா. த.வெ.க., ஆட்சி அமைந்ததும் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததும் உடனடியாக த.வெ.க.,வில் இணைந்ததும் சந்தேகத்தை எழுப்புகிறது.
6 சட்டசபை தொகுதி களிலும் ஓட்டளித்த மக்களின் மனநிலை என்ன. சட்டசபையில் பதில் சொல்ல வேண்டிய முதல்வருக்கு பதிலாக அமைச்சர்கள் பதில் கூறுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலாக தி.மு.க.,வின் சீனியர்கள் பேசுகிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது.
இம்மானுவேல் சேகரன் அனைவருக்கும் பொதுவான தலைவர். அவரது நினைவிடத்திற்கு திருமா வளவன் வரக்கூடாது என்று கிருஷ்ணசாமி கூறிய கருத்து கீழ்த்தரமானது. இதைக் கூறுவதற்கு கிருஷ்ணசாமி யார். தேவையில்லாமல் அவர் கூறியதால் தான் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கொளத்துார் தொகுதிக்கு நிறைய செய்துள்ளார். கொளத்துார் தொகுதி மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் என்றார்.