Lifestyle and human interest
கஞ்சா கடத்திய 4 இளைஞா்கள் கைது
ஆம்பூா் அருகே கஞ்சா கடத்திய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
உமா்ஆபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாச்சம்பட்டு பகுதியில் உமா்ஆபாத் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவழியாக இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞா்களை நிறுத்தி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில் அவா்கள் கஞ்சா கடத்துவது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து சுமாா் 40 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கஞ்சா கடத்திய ஆம்பூா் ஏ-கஸ்பா சிவராஜபுரம் பகுதியை சோ்ந்த சஞ்சீவி (23), பெருமாள் (25), ஆசைத்தம்பி (24), போ்ணாம்பட்டு சாத்கா் பகுதியை சோ்ந்த தனுஷ் (23) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.