Lifestyle and human interest
வைரமடை நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் அவதி
அரவக்குறிச்சி:கரூர் மாவட்ட எல்லையான வைரமடை பஸ் நிறுத்தத்தில், சில அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நின்று
மாவட்ட எல்லையான வைரமடை பஸ் நிறுத்தத்தில், சில அரசு பஸ்கள், தனியார்
பஸ்கள் நின்று செல்லாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும்
அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வைரமடை பஸ் நிறுத்தத்தில், அரசு பஸ்கள் முறையாக நின்று செல்லாததால்,
இப்பகுதி மக்கள் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். தென்னிலை, வைரமடை
மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு,
மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் கரூர்
உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கு அரசு பஸ்களை அதிகமாக பயன்படுத்தி
வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில்
சில அரசு பஸ்கள் நிற்காமல் கடந்து சென்று விடுகின்றன. குறிப்பாக இரவு
நேரங்களில் கூட பஸ்களை நிறுத்தாமல் சென்று விடுவதாக பொதுமக்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.
மாணவர்கள் மற்ற பஸ்களுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே வைரமடை பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு பஸ்களும், தனியார்
பஸ்களும் கட்டாயம் நின்று செல்ல வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில்
இயக்கப்படும் பஸ்களும் தவறாமல் நிற்க, போக்கு
வரத்து அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.