Politics
"கொலைகள் - தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு செல்லப்போகிறதா தவெக அரசு?" - எம்பி கனிமொழி
சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாக திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும், கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை கொலைகளிலும் முதலிடத்துக்கு கொண்டு செல்லப் போகிறதா தவெக அரசு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனும் அதிர்ச்சியுடனும் மக்கள் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா இந்தப் பொறுப்பற்ற அரசு?
தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்கிற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனும் அதிர்ச்சியுடனும் மக்கள் கடந்து கொண்டிருக்கிறார்கள். கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை, கொலைகளிலும் முதலிடத்திற்கு கொண்டு செல்லப் போகிறதா…
சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாட்டின் நிலை இன்று எங்கே சென்று கொண்டிருக்கிறது? இது தான் தவெக சொன்ன மாற்றமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
AI-ல் ஒரு வீடியோ உருவாக்க.. எவ்வளவு தண்ணீர் செலவாகும் தெரியுமா?
AI இயங்குவதற்கு ஆயிரக்கணக்கான பிரத்யேக Chips 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.
இவை மிகக் குறுகிய காலத்தில் கடுமையான வெப்பத்தை வெளியிடும்.
அந்த வெப்பம் எவ்வளவு? எவ்வளவு தண்ணீர் செலவாகும் அதற்கு?
