Arts, culture, entertainment and media
பாதுகாப்பு சாதனங்கள் கேட்டு துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி துாய்மை பணியாளர்கள், சதுரங்காடி, காந்தி சிலையில் இருந்து நேற்று காலை, 10:30 மணிக்கு, பேரணியாக, ஸ்டேட் வங்கி வரை சென்றனர். தொடர்ந்து அங்கு ஆர்ப்-பாட்டம் நடத்தினர். கிளை தலைவர் இளங்கோ தலைமை வகித்தார்.
அதில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்தல்; ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தி மாத ஊதியம் முழுமையாக வழங்குதல்; வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்யும் தனியார் நிறுவனம் மீது உரிய விசா-ரணை நடத்தி நடவடிக்கை எடுத்தல்; துாய்மை பணியாளர்க-ளுக்கு சீருடை, பணி கருவி, பாதுகாப்பு சாதனம், உணவு இடை-வேளை, கழிப்பறை வசதி செய்து தருதல்; கொரோனா காலத்தில் அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தினர்.கிளை செயலர் கருப்பண்ணன், உள்ளாட்சி சங்க மாவட்ட செயலர் கோவிந்தன், 50க்கும் மேற்பட்ட நகராட்சி ஒப்பந்த நிறு-வன பெண் துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.