Lifestyle and human interest
கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை வத்தல்மலை அடிவார மக்கள் அச்சம்
மேட்டூர்:மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி வத்தல்மலை அடிவார பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன், 45. இவரது மனைவி கனிமொழி,
வெள்ளாறு ஊராட்சி வத்தல்மலை அடிவார பகுதியை சேர்ந்த விவசாயி
சரவணன், 45. இவரது மனைவி கனிமொழி, 38. இவர்கள் பசுமாடு, அதன்
கன்றுகளை வளர்க்கின்றனர். நேற்று அதிகாலை, தம்பதி வீட்டு வளாகத்தில்
கட்டப்பட்டிருந்த, ஒரு கன்றுக்குட்டியை, சிறுத்தை கடித்து
கொன்றது.
காலையில் தம்பதியர், கன்றின் பாதி உடல் மட்டும் கிடந்ததை பார்த்து கலக்கம் அடைந்தனர். இதை அறிந்து டேனிஷ்பேட்டை வனச்
வனவர் சிவசக்தி உள்ளிட்ட வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று
பார்வையிட்டனர். பின் கன்றுக்குட்டியை, கால்நடை மருத்துவர்
பரிசோதித்த பின் புதைக்கப்பட்டது. தொடர்ந்து சிறுத்தையை கொன்ற
கன்றுக்கு இழப்பீடு வழங்க, சரவணன், கனிமொழி தம்பதியர்
வலியுறுத்தினர்.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம
மக்கள் வலியுறுத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை
எடுப்பதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.