‘தினமலர்– பட்டம்’ இதழ் வெறும் காகிதம் அல்ல மாணவர்களின் அறிவை வளர்க்கும் களஞ்சியம் ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன்
தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் நடந்த பட்டம் வினாடி வினா போட்டியில் ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் மாணவர்களிடம் பேசியதாவது– பேசியதாவது:
மாணவர்களாகிய நீங்கள் பள்ளி பாடங்களை படித்து கேள்விகளுக்கு பதில் எழுதுவதுடன் தங்களது கற்றலை நிறுத்தி கொள்ள கூடாது. கேள்விகளுக்கு பதில் சொல்வது மட்டும் கற்றல் அல்ல. அந்த கேள்வி ஏண் கேட்க்கப்பட்டது, அதன் பின்னணி என்ன, அது எதை சொல்கிறது என்பதை புரிந்து கொள்வது தான் ஆழமான கற்றல்.
வகுப்பறையில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பதை மட்டும் மனப்பாடம் செய்வதை தாண்டி தாங்களாகவே கேள்விகளை எழுப்பி, காரணங்களை தேடி புதிய தகவல்களை ஆராய வேண்டும். வளமான சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உறுவாக்கி முன்னேற முடியும்.
பாடப்புத்தகங்களை தாண்டி பொது அறிவு, செய்திகள், கதைகள், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு நுால்களை வாசிப்பதன் மூலம் மாணவர்களின் அறிவும், சிந்தனையும் விரிவடையும். ‘தினமலர்– பட்டம்’ இதழ் வெறும் காகிதம் அல்ல. அது மாணவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் பல்வேறு தகவல்களை வழங்கும் முக்கியமான வாய்ப்பு.
பட்டம் இதழை படிப்பதோடு நிறுத்தாமல் அதில் படித்த தகவல்களை பற்றி சிந்தியுங்கள். ஏன் எப்படி என்ற கேள்விகள் எழுப்பும் ஆர்வம் தான் உங்களது சிந்தனையை வளப்படுத்தும். மாணவர்களின் வாசிப்பு, ஆழமான கற்றல், கேள்வி கேட்கும் ஆர்வம், புதிய தகவல்களை தேடும் பழக்கம் ஆகியவற்றை வளர்த்து கொண்டால் எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கையை மாணவர்களாகிய நீங்கள் உருவாக்கிகொள்ள முடியும். என பேசினார்.