Economy, business and finance
தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கஜகஸ்தான் நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு, அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகள் அடங்கிய புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தியா - கஜகஸ்தான் இடையே வர்த்தக கருத்தரங்கம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, கஜகஸ்தானின் வர்த்தகம் மற்றும் ஒருங்கிணைப்பு துறை துணை அமைச்சர் ஐதர் அபில்டபெகோவ் தலைமையிலான குழுவினருடன், தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேச்சு நடத்தியுள்ளார்.
இதில், கஜகஸ்தானை சேர்ந்த மோட்டார் வாகனம், மருந்து உள்ளிட்ட துறைகளை சேர்ந்த, 65க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற நிலையில், இந்நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு முன்னணி தொழில் மற்றும் முதலீட்டு மையமாக தமிழகத்தின் பலங்களை எடுத்துரைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வலுவான உற்பத்தி சூழலமைப்பு, திறமைமிக் க பணியாளர்கள், வலிமையான உட்கட்டமைப்பு, செழிப்பான தொழிநுட்ப துறை, உணவு பதப்படுத்துதல், சுற்றுலா உட் பட வளர்ந்து வரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.