சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குச்சி கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்து 7 ஆண்டுகள் கடந்த பிறகும், நகர பகுதியின் முக்கிய சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. இதனால் கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோடு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இச்சாலைகளில் விதிமுறைகளை மீறி பைக்குகள், கார்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. தள்ளுவண்டி கடைகள் ஆங்காங்கே நிறுத்தி சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால் சாலைகள் அனைத்தும் சுருங்கி, காலை மாலை வேளையில் பள்ளி வாகனங்கள் உட்பட அதிகளவிலான வாகனங்கள் நகரைக் கடந்து செல்கின்றன. கச்சேரி சாலையின் இருபுறமும் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.