Politics
முன்னாள் துணை முதல்வர் உயிரி@ப்பு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்லா காளி கிருஷ்ண சீனிவாஸ் (57) மாரடைப்பு காரணமாக நேற்று (15-09-26) உயிர் இழந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்லா நானி என்று அறியப்படும் இவர், முதன்முதலாகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பின்னர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவையில் மாநிலத்தின் துணை முதலமைச்சர் மற்றும் மருத்துவ, சுகாதார விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பதவிவகித்து வந்தார். பின்னர், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யிலிருந்து விலகிய அவர், சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
இவ்வாறு பல்வேறு கட்சிகளில் பயணித்து முக்கிய பொறுப்பு வகித்துவந்த ஆளுமை மிக்க அவர், தற்போது உயிர் இழந்துள்ளது அரசியல் பிரமுகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது திடீர் மறைவுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)