கோழிப்பண்ணையில் மின்வெட்டால் நுாற்றுக்கணக்கான கோழிகள் பலி
சாத்துார், செப். 12- ஆலங்குளம் அருகே கொங்கன்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி அப்பகுதியில் கோழி பண்ணை நடத்தி
ஆலங்குளம் அருகே கொங்கன்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி அப்பகுதியில் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு கோழிப்பண்ணையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிகளை அதிக சூட்டில் இருந்து பாதுகாப்பதற்காக பண்ணையில் உள்ள தண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்விசிறிகள் ஆகியவை செயல்பட வில்லை. நேற்று காலையில் நுாற்றுக்கணக்கான கோழிகள் இறந்து கிடந்தன. இரவு நேரத்தில் அடிக்கடி மின் வெட்டு செய்வதால் மின்விசிறி செயல்படவில்லை.வெப்பத்தை தணிக்க தண்ணீரும் தெளிக்க முடியவில்லை. கோழிகள்வெப்பம் தாங்காமல் பலியாகி உள்ளது. இதனால் தனக்கு ரூ 1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கருப்பசாமி கூறினார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.