Arts, culture, entertainment and media
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.52 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
அரவக்குறிச்சி.:மூலனுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.52 லட்சத்திற்கு பருத்தி விற்பனை நடந்தது.
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ராஜபுரம், நஞ்சைகாலக்குறிச்சி, காசிபாளையம், சீரங்ககவுண்டனுார், ஆனந்தபுரம், புளியம்பட்டி,
அகிலாண்டபுரம், நம்பகவுண்டனுார், தொக்குப்பட்டி, தொக்குப்பட்டி
புதுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பருத்தி சாகுபடி முக்கிய
தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், ஆண்டுதோறும் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு, அதனை
வாழ்வாதாரமாக கொண்டு வருகின்றனர்.அறுவடை நடைபெற்று வரும்
நிலையில், பருத்தி மூட்டைகள் அருகிலுள்ள மூலனுார் ஒழுங்குமுறை
விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு, மின்னணு தேசிய வேளாண்மை
சந்தையில் ஏலம் விடப்படுகிறது. நேற்று திருப்பூர், கரூர், திருச்சி,
திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 181 பேர்
பருத்தி கொண்டு வந்திருந்தனர். இவைகளை கொள்முதல் செய்ய திருப்பூர்,
திண்டுக்கல் ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக
ஏலத்தில் பங்கேற்றனர்.அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு,
ரூ.9,719, குறைந்தபட்சமாக, ரூ.6,800, சராசரியாக, ரூ. 9,000க்கு
விற்பனையானது. 1,857 மூட்டைகள் கொண்ட, 586.73 குவிண்டால் பருத்தி
மொத்தம், 52 லட்சத்து, 79,258.47 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக
திருப்பூர் விற்பனைக்குழு துணை இயக்குநர்/செயலாளர் சண்முகசுந்தரம்
தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் அழகிரி
சாந்தலிங்கம் செய்திருந்தார்.