பைக்கில் சென்ற பட்டதாரி வாலிபரை வழிமறித்து கத்தியால் குத்தில் 6 சவரன் நகை ,பணம் பறிப்பு உளுந்துார்பேடை அருகே மர்மநபர்கள் அட்டுழியும் 5 பேரை கொண்ட வழிப்பறி கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பைக்கை வழி மறித்து பட்டதாரி வாலிபரை கத்தியால் குத்தி 6 சவரன் நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்ய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்னர்.
கடலுார் மாவட்டம் முடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தவேல், 25; பி.எட்., முடித்துள்ள இவர், மேற்படிப்பு படிப்பதற்காக ஆயத்தமாகி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில் உளுந்துார்பேட்டையில் இருந்து முடப்பள்ளிக்கு செல்வதற்காக நைனாக்குப்பம்- மதியனுார் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் வசந்தவேலின் பைக்கை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி,பைக் சாவியை பறித்துக்கொண்டு ,அவரை அருகில் உள்ள சவுக்கு தோப்பிற்கு இழுத்துச் சென்றனர்.
அங்கு வசந்தவேலை கத்தியால் தலை, கை ,காலில் குத்தியுள்ளனர். இதில் நிலைகுலைந்த வசந்தவேலிடம் இருந்து 6 சவரன் தங்கச் செயின் பறித்துக்கொண்டு, அவர் வைத்திருந்த மொபைல் போனிலிருந்து ஜிபே மூலம் வசந்தவேலின் கணக்கில் இருந்த 28 ஆயிரம் ரூபாயை மாற்றிக் கொண்டு மர்ம குப்பம் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதைத் தொடர்ந்த 9.30 மணி அளவில் அவ்வழியே சென்றவர்கள் வசந்தவேல் காயங்களுடன் இருந்ததை கண்டு அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.. அசோகன் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் பிடிப்பதற்கு , சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு,அவர் மர்ம குப்பம் குறித்து விசாரணையில் இறங்கியுளு்ளனர்.
மேலும் ஜிபே மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவரங்களை கொண்டு மர்ம ஆசாமிகள் பிடிக்கும் முயற்சியிலும் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடுஐ, அந்த சாலையை தினமும் பயன்படுத்திவரும் இருசக்கரவான ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.