13-ம் நூற்றாண்டு விநாயகர் சிற்பம்... செஞ்சி அருகே கிடைத்த பழங்கால தடயங்கள்

இக்கல்வெட்டின் அருகே சுமார் இரண்டரை அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்ட நான்கு கைகளுடன் கூடிய விநாயகரின் உருவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகிலுள்ள பாக்கம் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பத்துடன் கூடிய பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வேட்டவலத்தைச் சேர்ந்த ஆசிரியர் பாரதிராஜா மற்றும் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சுதாகர் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
