Crime, law and justice
மது அருந்த பயன்படும் நிழற் குடை உள்ளூர் பயணிகள் அதிருப்தி
கூடலுார்: கூடலுார், மாக்கமூலா பகுதியில் சேதமடைந்த நிழற்குடையை, சமூக விரோதிகள் மது அருந்த பயன்படுத்தி வருவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மாக்கமூலா பகுதியில், பயணிகள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட நிழற் குடை, சில ஆண்டுகளுக்கு முன் வாகனம் மோதி சேதமடைந்தது. புதிய நிழற் குடை அமைக்க நடவடிக்கை இல்லாததால், இங்கு முட்புதங்கள் சூழ்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. பயணிகள் வேறு வழியின்றி இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சில சமூக விரோதிகள், இரவில் நிழற் குடையை மது அருந்த பயன்படுத்தி வருகின்றனர்.
பயணிகள் கூறுகையில்,‘வாகனம் மோதி சேதமடைந்த நிழற் குடையை அகற்றிவிட்டு புதிய நிழற் குடை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லை. இப்பகுதி திறந்த வெளி ‘பார்’ போல மாறி உள்ளது. இதனை அகற்றி, புதிய நிழல் குடை அமைக்க வேண்டும்,’ என்றனர்.