Politics
மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்; தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: மாணவர்களின் திறமையைக் கண்டறியுங்கள் என தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இன்று (செப் 05) தனது இல்லத்தில், தேசிய ஆசிரியர் விருதுகளைப் பெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் போதையைக் குறைக்க வெளி விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிகள் அவசியம்; போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து குழந்தை பருவத்தைப் பாதுகாக்க ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை தாண்டி வழிகாட்ட வேண்டும்.