பி.ஏ.பி., கால்வாய்களில் நீர் திருட்டுகட்டாயமாகிறது நீர் மேலாண்மை
திருப்பூர், செப்.10– திருப்பூர், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் பி.ஏ.பி., பாசனக் கால்வாய்களில் நடைபெறும் நீர்
திருப்பூர், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் பி.ஏ.பி., பாசனக் கால்வாய்களில் நடைபெறும் நீர் திருட்டு தொடர்பான புகார்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஆண்டுதோறும் இதுதொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர் திருட்டால் பாதிக்கப்படும் கடைமடை விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதுடன், நீதிமன்றத்தையும் நாடி வருகின்றனர். பழைய நீர் மேலாண்மை நடைமுறைகளை மாற்றி, நீர் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் நீர்வளத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.