மனைவியின் மூக்கை துண்டித்த கணவன்; காரணத்தை கேட்டு அதிர்ந்த காவல்துறை

தெலுங்கானா மாநிலம், கோட்டா பள்ளியைச் சேர்ந்த மமதாவுக்கும், மல்லம்பேட் கிராமத்தைச் சேர்ந்த எனகண்ட்லா மணிச்சந்தருக்கும் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இத்தம்பதியினரிடையே கடந்த சில காலமாகவே குடும்பப் பிரச்சனைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக, கணவர் வீட்டை விட்டு வெளியேறிய மமதா, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். நீண்ட நாட்களாக பெற்றோர் வீட்டில் வசித்து வரும் மனைவியை மணிச்சந்தர் பலமுறை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழத்தார். ஆனால், மமதா வீட்டிற்கு வர மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று கணவர் மணிச்சந்தர் தனது மாமனார் வீட்டிற்குச் சென்று, மமதாவின் தந்தையான நாராயணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வாக்குவாதத்தின்போது இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த மணிச்சந்தர் மாமனார் நாராயணாவை மரக்கட்டையால் தாக்கியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி தந்தையைக் காப்பாற்றவும், சண்டையைத் தடுக்கவும் முற்பட்டார். அந்த சமயத்தில், மணிச்சந்தர் தனது மனைவியையும் கடுமையாகத் தாக்கி, அவரது மூக்கை பலமாகக் கடித்தார். இந்தத் தாக்குதலில் அவரது மூக்கின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால், அலறித்துடித்த மனைவியை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவன்மனைகு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)