கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இரு பெண்கள் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு

சிதம்பரம்: கொத்தடிமையாக இருந்த மீட்கப்பட்ட இரு பெண்கள் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களாக கொத்தடிமையாக வேலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த, 32 பேரை கர்நாடக அரசு, கடந்த 3ம் தேதி மீட்டது. மீட்கப்பட்டவர்கள் வேலுார் மாவட்ட தொழிலாளர் நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று அவர்கள் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டனர்.
விருத்தாசலம் அடுத்த கோமங்கலத்தை சேர்ந்த செல்வி, 36; நேற்று முன்தினம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதேபோல, சிதம்பரம் அடுத்த பூவாலை கிராமத்தை சேர்ந்த விஜயா 45: என்பவரை, தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷ்னர் (அமலாக்கம் )குமார், உதவி ஆய்வாளர்கள் ஹரி நடராஜன், ரமேஷ்பாபு ஆகியோர் வி.ஏ.ஓ., வசந்தி பரங்கிப்பேட்டை தலைமை காவலர் லதா ஆகியோர் முன்னிலையில், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போயிருந்த அந்த பெண் மிக மோசமான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.