வருமான வரித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கு
நாமக்கல்:வருமான வரித்துறை சார்பில், வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, நாமக்கல்லில்
வரித்துறை சார்பில், வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு
கருத்தரங்கு, நாமக்கல்லில் நடந்தது. வருமான வரித்துறை அலுவலர்
அப்துல்ரஷீத் வரவேற்றார்.
ரகுகுமார் முன்னிலை வகித்தார். ஈரோடு வருமான வரி இணை ஆணையர்
சுரேஷ்பாபு தலைமை வகித்து பேசுகையில், ''வருமான வரித்துறை எப்போதும்
பொதுமக்களுடனும், வரி செலுத்துவோருடனும் இணக்கமாக
செயல்படுவதையே விரும்புகிறது,'' என்றார். தொடர்ந்து, வருமான
வரிச்சட்டம்-2025ன் முக்கிய விதிகள், முன்கூட்டி வரி செலுத்துதல்,
கணக்கீடு மற்றும் காலக்கெடு குறித்து விளக்கினார். வணிகர்கள்,
பண்ணையாளர்கள், தொழில் அதிபர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம்
அளித்தார்.நாமக்கல் மாவட்ட ஆடிட்டர் சங்க தலைவர் கோபிநாத்,
நிர்வாகிகள் விஜயன், வெங்கட சுப்ரமணியம், வருமான வரித்துறை
அலுவலர்கள் பிருத்விராஜ், கமலக்கண்ணன், சேகர், வணிகர்கள்,
பண்ணையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.