Economy, business and finance
வளர்ச்சியில் முக்கிய துாணாக வாகன துறை மாற வேண்டும்: சியாம் மாநாட்டில் பிரதமர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருவதால், மக்களின் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக விரிவடைவதால், பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கி வாகன துறைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
மாசற்ற, நிலையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றத்தில், வாகனத்துறை முக்கிய பங்கேற்க வேண்டும்.
கட்டுப்பாடு வரும் இந்திய வாகனத்துறை மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது. எனவே, மின்சார வாகனங்களுக்கான மாற்றத்தில் வாகனத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும்
