Economy, business and finance
ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஐஸ்கிரீம் தயாரிப்பு இயந்திரங்கள் சென்னை கண்காட்சியில் இடம்பெற்றன

சென்னை: ஐஸ்கிரீம் தயாரிப்பு, விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் வகை யில் சென்னை, வர்த்தக மையத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை இந்திய ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்காட்சி நடைபெற்றது.
வழக்கமாக தயாரிக்கப் படுவதற்கு மாற்றாக புளி, மிளகாய், இஞ்சி பிளேவர்களில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
பட்டர் ஸ்காட்ச், ஸ்டெபிலைசர், சாக்லேட் பவுடர், நட்ஸ் வகைகளும், விதவிதமான ஐஸ்கிரீம் பேக்கிங் பொருட்கள், இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டு ஐஸ்கிரீம் வகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் இயந்திரங்களின் விலை 2 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரையும், பிரீஸர் வகைகள் 20,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் இடம்பெற்றிருந்தன.
சாக்லேட், பனீர், டோபு, சீஸ் தயாரிப்புக்கான இயந்திரங்கள், பிரான்சைஸ் எடுத்து நடத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தன.
இந்திய ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி கூறுகையில், தென்னிந்திய சந்தையில் சென்னை முக்கிய பங்காற்றுகிறது.
ஐஸ்கிரீ ம் தொழிலில் நவீன தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், குளிர்பதன பெட்டிகள், ஐஸ் கிரீம் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் குறித்து தொழில்துறையினர் நேரடியாக அறிந்து கொள்ளும் வ கையில் 200 அரங்குகள் இடம்பெற்றிருந்தன. இதை 25,000 பேர் பார்வையிட்டு உள்ளனர், என்றார்.
ஐஸ்கிரீம் பேக்கிங் பொருட்கள், இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டு ஐஸ்கிரீம் வகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றன நாட்டின் ஐஸ்கிரீம் சந்தை மதிப்பு 2028ல் 55,000 கோடி ரூபாயை எட்டும் என கணிப்பு