மாவட்டத்தில் 270 கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் இலக்கு: கலெக்டர்
நாமக்கல்:மாவட்டம் முழுவதும், 270 சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்த இலக்கு நிர்ணயம்
முழுவதும், 270 சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்த
இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர்
மதுபாலன் பேசினார்.
பஞ்., தெத்துக்காடு கிராமத்தில், கால்நடை பராமரிப்புத்துறை
சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு
கிடைக்கப்பெறாத கிராமங்களில், கால்நடைகளின் நலம் பாதுகாக்கும்
வகையில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்த
முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள, 15
ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், தலா, 18 வீதம், மொத்தம்,
270 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், நோய்களுக்கு
எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம்,
செயற்கைமுறை கருவூட்டல், சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை
சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள்
கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
முகாம் நடத்தப்படும் நாள், இடம் அந்தந்த கால்நடை உதவி
மருத்துவர்களால் அறிவிக்கப்படும். முகாமிற்கு, கால்நடை வளர்ப்போர்
தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல், பஞ்., உதவி
இயக்குனர் பிரபாகரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.