Politics
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பிரிக்ஸ் அமைப்பு கண்டித்தது குறித்து...
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள். - படம் - எக்ஸ்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு சனிக்கிழமை (செப். 12) கண்டனம் தெரிவித்தது.
இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லியில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.
பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் தில்லி பிரகடனம் உலகத் தலைவர்களால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதன்மூலம், கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் கண்டித்துள்ளன.
மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை இருக்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை முழுவதுமாக தகர்த்தெறிய வேண்டும் என்றும் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்தியது.
அந்தப் பிரகடனமானது, உலகளாவிய பயங்கரவாதம், சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள், இணையவழி மோசடி மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
BRICS condemned the Pahalgam terror attack on Saturday (Sept. 12).
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.