புதிதாக உருவாகும் 3 நாடுகள்; கையெழுத்தான கூட்டுப் பிரகடனம்

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியவை தனி நாடுகளாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை இன்றுவரை பிரிட்டன் (ஐக்கிய ராஜ்ஜியம்) அரசியலமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்து தனி நாடாக இயங்கவும், சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களின் தலைவர்கள் வேல்ஸ் நாட்டின் தலைநகர் கார்ட்ப் நகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன்மூலமாக, தங்கள் நாடுகளின் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது. அதனால், ”இனிவரும் காலங்களில் பிரிட்டனுக்கு இந்த நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைத் தடுக்கும் அதிகாரம் இல்லை” என இந்த நாடுகளின் தலைவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
மேலும், சுதந்திரத்திற்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவும், இந்த நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதன்படி, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை தனி நாடுகளாகவும், வடக்கு அயர்லாந்து நாடானது அயர்லாந்து குடியரசுடன் இணையவும் விருப்பம் தெரிவித்துள்ளன.
1997 ஆம் ஆண்டு முதல் இந்த நாடுகள் பிரிட்டனில் இருந்து பிரிய விருப்பம் தெரிவித்து வந்தன. எனினும், இந்த நாடுகளில் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சித்தலைவர்கள் ஒரே நேரத்தில் ஆட்சியில் இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)