பொது – தடுப்பில் மோதி பைக் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் பரிதாப பலி
பட்டினப்பாக்கம்: பட்டினப்பாக்கத்தில், சாலை தடுப்பில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், அஜித், 21, என்ற ‘ஏசி’ மெக்கானிக், சம்பவ இடத்திலேயே பலியானார்.
மயிலாப்பூர், சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அஜித், 21; ‘ஏசி’ மெக்கானிக். தன் நண்பரான மஜீத், 18, என்பவருடன், பட்டினப்பாக்கம் கடற்கரையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்தினார்.
பின், இருவரும் ‘கே.டி.எம்., டியூக்’ இருசக்கர வாகனத்தில் டி.ஜி.எஸ்., தினகரன் சாலை வழியாக அடையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அம்பேத்கர் மணிமண்படம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அஜித், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; லேசான காயத்துடன் மஜீத் உயிர் தப்பினார்.
மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.