Politics
அண்ணாமலை பல்கலைக்கு ரூ.5,332 கோடி மானியம்: அமைச்சர் விஸ்வநாதன் தகவல்
ச ட்டசபையில் நடந்த விவாதம்: மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை
மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, 2013ல் அரசுடைமை ஆக்கப்பட்டது.
அங்குள்ள பணியாளர்கள் நிலை குறித்து, அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஓய்வூதிய நிலுவைகளை வழங்க வேண்டும்.
அமைச்சர் விஸ்வநாதன்: கடும் நிதி நெருக்கடி, தேவைக்கு அதிகமான பணியாளர்கள், நிர்வாக சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டதால், அண்ணாமலை பல்கலையின் நிதிநிலை மிகவும் மோசமடைந்தது.
சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2013ல் அண்ணாமலை பல்கலை, தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2013 - -14 முதல் 2026 - -27 வரை, அண்ணாமலை பல்கலைக்கு, 5,332 கோடி, 32 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 2026- - 27ல், 525 கோடி ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை பல்கலைக்கு 52 கோடி ரூபாய், மதுரை காமராஜர் பல்கலைக்கு 60 கோடி ரூபாய், மீதமுள்ள 10 பல்கலைகளுக்கு, 6 கோடி ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013 முதல் 2024 வரை ஓய்வுபெற்ற ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு, மாத ஓய்வூதியம் , 50 சதவீதம் ஓய்வூதிய பணப் பயன்கள் வழங்கப் பட்டு விட்டன.
கடந்த 2024 செப்டம்பர் முதல் 246 ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
தணிக்கை தடை, நிதிப் பற்றாக்குறையே காரணம். தணிக்கை தடை நிவர்த்தி செய்யப்பட்ட பின், ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.