நாளை கூலி உயர்வு பேச்சுவார்த்தை காத்திருப்பு போராட்டம் வாபஸ்
குமாரபாளையம்:குமாரபாளையத்தில் நாளை (5ல்) கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடப்பதையொட்டி, தொழிற்சங்க
நாளை (5ல்) கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடப்பதையொட்டி, தொழிற்சங்க
கூட்டியக்கம் சார்பில் நடத்தப்பட்ட காத்திருப்பு போராட்டம்,
தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
விசைத்தறி தொழிலில் பணிபுரியும் ஆண், பெண் இரு பிரிவு
தொழிலாளர்களுக்கும், 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டுமென
தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் தட்டாங்குட்டை ஊராட்சி, எதிர்மேடு
பகுதியில் விலைவாசி உயர்வு காரணமாக, அதற்கு ஏற்ற கூலி உயர்வு வழங்க
வேண்டும் என்று, சி.ஐ.டி.யு., மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., கூட்டு இயக்கம்
சார்பில், கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சதவீத கூலி உயர்வு மற்றும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல
கட்ட போராட்டங்கள் நடைபெற உள்ளது என, சங்க நிர்வாகிகள் கூறினர்.
விசைத்தறி தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து,
கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தக்கோரி,
தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாக கூறி, நேற்றுமுன்தினம் போராட்டம் துவக்கினர்.
கிடைக்கும் வரை, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட
போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நகரின் பல்வேறு
பகுதிகளில் விசைத்தறிகள் செயல்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாசில்தார், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்
சங்கத்தினர், தொழிலாளர் நல அலுவலர் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும்
கூலி உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தை நாளை (செப்., 5ல்) காலை 11:00
மணியளவில் நடக்கவுள்ளதால், காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக
நிர்வாகிகள் கூறினர்.