Arts, culture, entertainment and media
ஊழல் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போராட்டத்தில் வலியுறுத்தல்
மதுரை: மதுரையில் இந்திய குடியரசு தொழிலாளர் சங்கம் சார்பில் துாய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோச்சடை நகராட்சி மண்டல இயக்குநர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் அன்புவேந்தன் பேசினார். தலைமை நிலைய செயலாளர் கல்பனா, துணைச் செயலாளர் ஜெகநாதன், ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி பங்கேற்றனர். உள்ளாட்சிகளில் கொசு ஒழிப்புப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் சம்பளம், அகவிலைப்படி வழங்க வேண்டும். துாய்மை, மருத்துவ, சுகாதாரப் பணிகளை ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்கள் தொழிலாளர்களிடமிருந்து ரூ.பல கோடி முறைகேடு செய்ததாக தி.மு.க., ஆட்சியில் தற்போதைய முதல்வர் விஜய் குற்றம் சாட்டினார். அதன்படி ஊழல் செய்த ஒப்பந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.