Politics
BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் - ஏன் முக்கியம்?
ஈரான் போர், ஹார்முஸ் நெருக்கடி, இந்தியா–சீனா உறவு என முக்கிய சூழலில் BRICS மாநாடு நடைபெறுகிறது|India hosts BRICS amid the Iran war, Hormuz crisis and Xi Jinping’s return, putting India’s diplomatic leadership in global focus.

டெல்லியில் செப்.12, 13ல் நடக்கும் BRICS மாநாட்டில் Xi, Putin உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். உலகச் சூழலில் இதன் முக்கியத்துவம் என்ன?
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ்.
இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா புதுடெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கவுள்ளது.
> தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா,
> எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி,
> இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ,
> ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்,
> பிரேசில் வெளியுறவுத் தலைவர் மௌரோ வியெய்ரா.
இவர்கள் பிரிக்ஸின் உறுப்பு நாடுகளிலிருந்து டெல்லியில் நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களின் லிஸ்ட்.
இதைத் தாண்டி, இன்னும் பல நாடுகளிலிருந்து தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்தப் பிரிக்ஸ் மாநாடு மிகவும் முக்கியமான நேரத்தில் நடைபெறுகிறது.
ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கூடவே, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால், இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது சீனா.
ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக அமெரிக்காவும், மத்திய கிழக்கு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆக, இந்த மூன்று நாடுகளின் அதிபர்களும் இந்த மாநாட்டில் ஒன்றாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது இந்தியா.
மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்தை நோக்கி நகர்வதுபோலத் தெரிகிறது.
அடுத்ததாக, 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வருகிறார் ஜி ஜின்பிங். இது இந்தியா-சீனா உறவில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.
இப்படிப் பல்வேறு முக்கிய உலகச் சூழலுக்கு இடையில் இந்தியாவின் தலைமையின் கீழ், இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது.!
