கூடலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை... பொதுமக்கள் பீதி..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் நேற்று இரவு ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் உலா வந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் நேற்று இரவு ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் உலா வந்தது. இந்த யானை அங்குள்ள பொருட்களை உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. முதுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இவை உலா வருவது வழக்கம். கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது பழகிவிட்டாலும், மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு நேரத்தில் கூடலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் உலா வந்தது. காலையில் யானையைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
