Arts, culture, entertainment and media
மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நகராட்சியை கண்டித்து மக்கள் மறியல்

பர்கூர்: பர்கூர் அருகே, மூன்று மாதங்களாக குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்-டது கணமூர் பஞ்சாயத்து. இங்கு வனப்பகுதியை ஒட்டிய பாரதி நகர், பல்லக்கொல்லை, பாலுமா நகர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கணமூர் பஸ் ஸ்டாப் அருகே கட்டப்பட்டுள்ள, 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து கடந்த, 10 ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்-பட்டு வந்தது.இப்பகுதியை சேர்ந்த, 200 குடும்பங்களுக்கும் இது மட்டுமே குடிநீர் ஆதாரமாக இருந்து வந்த நிலையில், கடந்த, 3 மாதங்க-ளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, மோட்டார் பழுதானதால் தண்ணீர் வழங்கவில்லை.
இது குறித்து பல முறை இப்பகுதி மக்கள் பி.டி.ஓ., அலுவல-கத்தில் முறையிட்டும் பலனில்லை. கடந்த, 31ல், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்களை அதிகாரிகள் சந்தித்து, ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என, வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், குடிநீர் பிரச்னையை தீர்க்கவில்லை.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 7:50 மணிக்கு கணமூர் பஸ் ஸ்டாப் அருகே குப்பம் - பர்கூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து, கோஷங்கள் எழுப்பினர். பர்கூர் பி.டி.ஓ.,க்கள் செந்தில், கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் அன்ப-ழகன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களில், குடிநீர் தடையின்றி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து, காலை, 10:00 மணிக்கு சாலைமறி-யலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி யில், 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்-டது.
