Lifestyle and human interest
4 வழிச்சாலையை தொடர்ந்து ரிங்ரோடு பணியும் நிறுத்தம்; சென்னிமலை பகுதி மக்கள் அதிருப்தி
சென்னிமலை:பெருந்துறையில் இருந்து காங்கேயம் வரை புறவழிச்சாலை அமைக்க, சென்னிமலை பகுதி மக்கள் கோரிக்கை
இருந்து காங்கேயம் வரை புறவழிச்சாலை அமைக்க, சென்னிமலை பகுதி மக்கள்
கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த தி.மு.க., ஆட்சியில்
பெருந்துறையில் இருந்து சென்னிமலை அருகே அத்திக்காடு வரை நான்கு
வழிச்சாலை பணி, 69 கோடி ரூபாயில் தொடங்கி நடந்தது.
சென்னிமலையில் புறவழிச்சாலை அமைப்பதற்கும் அறிவிப்பு
வெளியிடப்பட்டு இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்தது. பெருந்துறை -
-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில், 8.368 கி.மீ., துாரத்தில், 30
மீட்டர் அகலத்தில், 11 வளைவுகளுடன் இந்த புறவழிச்சாலை அமைக்க முடிவு
செய்யப்பட்டது.
திட்டமதிப்பீட்டு அறிக்கை மற்றும் சீரமைப்பு குழுவால்
அங்கீகரிக்கப்பட்ட சிகப்பு நிற வரைவு பாதையும் உருவாக்கப்பட்டது.
அட்டவணை பிடாரியூர், சென்னிமலை மற்றும் பசுவபட்டி யில் 27 ஹெக்டேர்
நிலங்களும் கையகப்படுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது. அரசு வழிகாட்டி
மதிப்பு குறைவாக உள்ளதால் அதை உயர்த்தி வழங்க தொடர்ந்து கோரிக்கை
விடுத்து வந்தனர்.
இதனால், -2025 செப்.,24ல் நெடுஞ்சாலைகள் துறை தனி
வருவாய் அலுவலர் (கோவை) தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்
சென்னிமலையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நில உரிமையாளர்கள்
அனைவரும், நிலத்துக்கு உண்டான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்ற
கோரிக்கையை மட்டுமே முன் வைத்தனர். இதனால் ரிங்ரோடு அமைப்பதற்கான
ஆரம்ப கட்டப்பணி விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பெருந்துறை--சென்னிமலை நான்கு
வழிச்சாலை பணி அப்படியே நிறுத்தப்பட்டது. அதே போல் ரிங்ரோடு
அமைக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக, மக்கள் வேதனை
தெரிவித்துள்ளனர்.
கூறியதாவது: நான்கு வழிச்சாலை மற்றும் சென்னி மலையை சுற்றி
ரிங்ரோடு பணி நடந்த நிலையில், ஆட்சி மாற்றத்தால் முழுமையாக
நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து,
விபத்துக்களும் அதிகரித்துள்ளது. தமிழக அரசு தலையிட்டு உடனடியாக
நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை தொடர்வதுடன், ரிங்ரோடு அமைக்கும்
பணியையும் தொடங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.