Crime and courts · 1 outlet covered this

ஜப்தி செய்யப்பட இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்த உரிமையாளர் கைது

How outlets told it

The Hindu Tamil655h ago

ஜப்தி செய்யப்பட இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்த உரிமையாளர் கைது

Read at The Hindu Tamil
ஜப்தி செய்யப்பட இருந்த வீட்டை குத்தகைக்கு விட்டு மோசடி செய்த உரிமையாளர் கைது
Photo: The Hindu Tamil

சென்னை:திருச்​சி​யைச் சேர்ந்​தவர் முகமது யூசுப் (36). தனி​யார் நிறு​வனத்​தில் வேலை செய்து வரும் இவர், சென்​னை​யில் குத்​தகைக்கு வீடு தேடி வந்​தார்.

அப்​போது ஆன்​லைன் செயலி மூலம் மடிப்​பாக்​கம் குபேரன் நகர் 10-வது தெரு​வில் வீடு குத்​தகைக்கு இருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து வீட்டு உரிமை​யாளர் ரமேஷ்கு​மாரிடம் (49) பேசி, ரூ.15 லட்​சத்​துக்கு குத்​தகை ஒப்​பந்​தம் செய்​தார்.

பின்​னர் இணை​ய​வழி பணப்​பரி​மாற்​றம் மூலம் ரூ.14.50 லட்​சம் செலுத்​தி, கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் அந்த வீட்​டில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், அதே மாதம் 23-ம் தேதி வங்கி அதி​காரி​கள் வீட்​டுக்கு வந்​து, ரமேஷ்கு​மார் கடன் பெற்று அதை திருப்​பிச் செலுத்​தாத​தால், நீதி​மன்ற உத்​தர​வின்​படி வீட்டை ஜப்தி செய்ய உள்​ள​தாக தெரி​வித்​தனர். தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி அந்த வீடு சீல் வைக்​கப்​பட்​டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது யூசுப், குத்​தகை தொகையை திருப்​பித் தரு​மாறு ரமேஷ்கு​மாரிடம் கேட்​டார். அவர் ரூ.2 லட்​சம் மட்​டும் திருப்​பிக் கொடுத்​து​விட்​டு, மீத​முள்ள ரூ.12.50 லட்​சத்தை வழங்​காமல் ஏமாற்றி வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

வீடு கடனில் இருப்​பதும், நீதி​மன்ற உத்​தர​வின்​படி ஜப்தி செய்​யப்பட உள்​ளதும் ஏற்​கெனவே தெரிந்​திருந்​தும், தன்னை ஏமாற்​றும் நோக்​கில் வீட்டை குத்​தகைக்கு விட்டு பணம் பெற்​ற​தாக முகமது யூசுப் அளித்த புகாரின்​பேரில், கடந்த 11-ம் தேதி மடிப்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, கொளத்​தூர் ஆசிரியர் காலனி​யில் இருந்த வீட்டு உரிமை​யாளர் ரமேஷ் கு​மாரை நேற்​று முன்​தினம் கைது செய்தனர்.

சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்​கப் பாயின்ட் பிளாசா