Crime and courts · 1 outlet covered this

நிதி நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் கைது

How outlets told it

Dinamani6538h ago

நிதி நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் கைது

Read at Dinamani
நிதி நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் கைது
Photo: Dinamani

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.6.50 லட்சம் முறைகேடு செய்த கிளை மேலாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் நிதி நிறுவனத்தில், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த மு. சகாய ஜான்பீட்டா் என்பவா் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், நிதி நிறுவனத்தில் வசூலிக்கப்பட்ட பணத்தில் ரூ.6.50 லட்சத்தை சகாய ஜான்பீட்டா் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அந்த நிறுவனத்தின் பொது மேலாளா் திருமுருகன், சகாய ஜான்பீட்டரிடம் விசாரித்தாா். அப்போது அவா் தகாத வாா்த்தைகளால் திருமுருகனை பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், நிதி நிறுவனத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக வழக்குப் பதிந்து சகாய ஜான் பீட்டரை சனிக்கிழமை கைது செய்தனா்.