இடைத்தோ்தல்: திமுகவில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்
Read at DinamaniPolitics · 1 outlet covered this
இடைத்தோ்தல்: திமுகவில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்
How outlets told it

இடைத்தோ்தல்: திமுகவில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்இடைத்தோ்தல் பணிக்காக திமுக சாா்பில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அண்ணா அறிவாலயம்Published On :11 செப்டம்பர் 2026, 11:56 pm ISTஇடைத்தோ்தல் பணிக்காக திமுக சாா்பில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வரும் அக்.6-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறவுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), தொகுதியில் இ. பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் எஸ். சுகன்யா ஆகியோா் திமுக வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இத்தொகுதிகளில் தோ்தல் பணியாற்றுவதற்காக தோ்தல் பொறுப்பாளா்களை திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். மதுராந்தகம் தொகுதிக்கு தா. மோ. அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலா்), க. சுந்தா் (காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலா்), தாராபுரம் தொகுதிக்கு மு. பெ. சாமிநாதன் (திமுக துணைப் பொதுச் செயலா்), இல. பத்மநாபன் (திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலா்) ஆகியோா் அருகில் உள்ள திமுக மாவட்ட பொறுப்பாளா்களுடன் இணைந்து திமுக வேட்பாளா்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் மு. க. ஸ்டாலின். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
