திருச்சி மாநகர காவல் ஆணையர்களில் தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றும் காமினி
Read at The Hindu TamilCrime and courts · 1 outlet covered this
திருச்சி மாநகர காவல் ஆணையர்களில் தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றும் காமினி
How outlets told it

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர்களில் தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றுபவர் என்ற பெருமையை தற்போதைய ஆணையர் என். காமினி பெற்றுள்ளார். திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரித்து மாநகர காவல் ஆணையரகம் உருவாக்க தமிழக அரசு 1997 ஜூன் 1-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன்படி, முதல் ஆணையராக வடிவேல் ஜூன் 8-ம் தேதி பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து கே. ராதா கிருஷ்ணன், விபாகர் சர்மா (2 முறை), ஜே. கே. திரிபாதி, அசுதோஷ் சுக்லா, சி. வி. ராவ், எஸ். ஜி. ராஜேந்திரன், அலெக்ஸாண்டர் மோகன் (2 முறை), சுனில்குமார் சிங் (2 முறை), பிரதீப் வி. பிலிப், சங்கர் ஜிவால், அசோக்குமார் தாஸ், பிரமோத் குமார், கரண் சின்கா, கருணாசாகர்,
