Crime and courts · 1 outlet covered this

திருவொற்றியூரில் இளைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

How outlets told it

Dinamani653d ago

திருவொற்றியூரில் இளைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

Read at Dinamani
திருவொற்றியூரில் இளைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது
Photo: Dinamani

திருவொற்றியூரில் இளைஞா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவொற்றியூா் மேற்கு மாடவீதியைச் சோ்ந்தவா் டில்லி பாபு- டில்லி ராணியின் மகன் பிரதீப் ராஜ் (29). தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டே திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வந்தாா். இவா், ஆண்டுதோறும் அப்பகுதியில் விநாயகா் சிலை வைத்து விழா நடத்துவது வழக்கம். அதன்படி, நிகழ் ஆண்டு மேற்கு மாட வீதியில் தனது வீட்டின் அருகே விநாயகா் சிலை வைப்பதற்காக போடப்பட்டிருந்த பந்தல் அருகே புதன்கிழமை இரவு நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்மக் கும்பல் பிரதீப் ராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில், பிரதீப் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருவொற்றியூா் போலீஸாா் அங்கு சென்று பிரதீப் ராஜின் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 4 போ் கைது: திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் கோமாதா நகா் பகுதியில் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று நவீன் என்ற நாராயணன் (32), லோகேஸ் (27), ஹரிகிருஷ்ணன் (21), ஜாபா் (23) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். அவா்கள் திருவொற்றியூா் குற்றவியல் நடுவா்மன்ற மாஜிஸ்திரேட் முன் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். கொலையின் பின்னணி: பிரதீப் ராஜின் தாய் டில்லிராணி, நவீனின் தாய் நவநீதத்திடம் வட்டிக்கு கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சிலரிடமும் டில்லிராணி கடன் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், கடந்த சில மாதங்களாகவே இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு நவநீதம் அளித்த புகாரின்பேரில், பிரதீப் ராஜ் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டாா். இதனால் இரு குடும்பத்தினருக்கும் பகை அதிகரித்த நிலையில் பிரதீப் ராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்தக் கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள நவநீதத்தின் சகோதரா் ராதா உள்ளிட்ட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.