Weather and environment · 1 outlet covered this

கோயில்களுக்குப் யானைகள் வாங்க இருந்த தடை நீக்கம்

How outlets told it

Polimer News1006h ago

கோயில்களுக்குப் யானைகள் வாங்க இருந்த தடை நீக்கம்

Read at Polimer News
கோயில்களுக்குப் யானைகள் வாங்க இருந்த தடை நீக்கம்
Photo: Polimer News

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு 5 யானைகள் அசாம் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வாங்கியுள்ளது. ஏற்கனவே, ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் உள்ள கோயில்களுக்கு அசாமில் இருந்து கொண்டுவரப்பட்ட யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான விவகாரத்தில், கோயில்களுக்குப் புதிதாக யானைகள் வாங்கவோ, தானமாகப் பெறவோ கூடாது என்று தனி நீதிபதி விதித்திருந்த தடையை, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அண்மையில் ரத்து செய்திருந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு வனத்துறையும் யானைகளை வாங்க ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக துர்கா என்ற 5 வயது பெண் யானையை அசாம் இருந்து வாங்கப்பட்ட நிலையில், மதுரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.