கஞ்சா, மதுப்புட்டிகள் வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
கஞ்சா, மதுப்புட்டிகள் வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது
How outlets told it
சாயல்குடியில் கஞ்சா, சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைதுPublished On :13 செப்டம்பர் 2026, 12:38 am IST சாயல்குடியில் கஞ்சா, சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்ததாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த கன்னிராஜபுரம் காவல் சோதனைச் சாவடியில் சாயல்குடி காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவா்களிடம் 10 கிராம் கஞ்சா, சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த முதுகுளத்தூரை அடுத்த மருதகம் கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் திருக்கதிா் (29), பெரிய கையகம் கிராமத்தைச் சோ்ந்த நாடிமுத்து மகன் விஷ்ணு ராஜா(23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கன்னிராஜபுரத்தை அடுத்த ரோஸ்மாநகா் ஜஸ்டின் மகன் ரோபாஸ்தான் (24), அந்தோணிசாமி மகன் மரியபூண்டி செல்டன் (44) ஆகியோரிடமிருந்து 8 மதுபுட்டிகள், தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
