பைக் விபத்தில் இளைஞர் பலி!
Read at DinamaniAccidents · 1 outlet covered this
பைக் விபத்தில் இளைஞர் பலி!
How outlets told it

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்த பாலச்சந்திரன் மகன் ராஜா (19). இவா் சென்னையில் உள்ள தனியாா் இரு சக்கர வாகன நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், விடுமுறைக்கு ஊருக்கு வந்த ராஜா, தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வெளியே புறப்பட்டாா். மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் கடம்பன்குளம் பகுதியில் சென்றபோது, இரு சக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் ஏற்கனவே ராஜா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
