லாரியில் இருந்து விழுந்த இரும்புப் பொருள்.. பைக்கில் சென்ற 2 வீரர்கள் உயிரிழப்பு!
Read at Polimer NewsCivic issues · 1 outlet covered this
லாரியில் இருந்து விழுந்த இரும்புப் பொருள்.. பைக்கில் சென்ற 2 வீரர்கள் உயிரிழப்பு!
How outlets told it

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து கனமான இரும்புப் பொருள் விழுந்ததில் பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, நகரி என்ற இடத்தில் அவர்கள் மீது லாரியில் இருந்து கனமான இரும்புப் பொருள் தவறி தலையில் விழுந்தது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். கனமான இரும்புப் பொருள் தவறி விழும் அளவுக்கு அலட்சியமாக இருந்ததுடன் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
